தேனீக்கள் அறுகோண வடிவில் தேன்கூடுகளை கட்டுகின்றன. எதனால் அறுகோண வடிவம்? தேனீக்களுக்கு தங்கள் கூடுகளை கட்டுவது பற்றிய அறிவை இறைவன் தான் கற்றுத் தந்தான் என்று குர்ஆன் கூறுகிறது. கணிதவியலாளர்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சி செய்து, 1999 இல் அறுகோணம் தான் சிறந்த வடிவம் என்று நிரூபித்தார்கள்.
பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் பிரமிக்க வைக்கும் ஒழுங்கில் அமைந்திருப்பதை கிரகணங்கள் மூலம் நாம் உணரலாம். இந்த அதிசிய வைக்கும் ஒழுங்கிற்கும் பிரமிக்க வைக்கும் துல்லியத்திற்கும் பின்னால், கண்டிப்பாக ஒரு தெய்வீக சக்தி இருந்திருக்க வேண்டும்.
1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதனால் சொல்ல முடியாத நான்கு தகவல்கள் குர்ஆனின் ஒரு வசனத்தில் இடம்பெற்றுள்ளது. முஹம்மது நபி அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கோ அல்லது அவர் காலத்திற்கு முன் வாழ்ந்தவர்களுக்கோ இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் தெரிந்திருக்காவிட்டால், எல்லாம் அறிந்த இறைவன் தான் இந்த தகவலை முஹம்மது நபி அவர்களுக்கு சொல்லியிருக்க வேண்டும்.
பிரமிட் டெக்ஸ்ட்களில் எழுதப்பட்டுள்ளதை குர்ஆன் மறுக்கிறது. 3000 வருடங்கள் பழமையான பிரமிட் டெக்ஸ்ட்களில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த எழுதப் படிக்கக் கூட தெரியாத முஹம்மது நபியால் எப்படி சொல்ல முடிந்தது?