முஸ்லிம்கள், மாற்று மதத்தவர்களோடு நட்பு கொள்வதை பற்றி குர்ஆனுடைய பல வசனங்கள் பேசுகின்றன. அவை 3:28, 3:118, 4:144, 5:51, & 58:22.
இந்த வசனங்களை, இஸ்லாமிய மூலாதாரங்களான குர்ஆன் மற்றும் முஹம்மது நபி அவர்களின் பொன்மொழியின் ஒளியில் ஆராய வேண்டும்.
குர்ஆன் வசனங்களின் மொழிபெயர்ப்பு
குர்ஆன் 3:28
குர்ஆன் 4:144
குர்ஆன் 5:51
இந்த வசனங்களின் விளக்கம்
இந்த வசனங்களில் பயன்படுத்தப்பட்ட “அவ்லியா” என்ற அரபு வார்த்தையின் அர்த்தத்தை, “நண்பர்கள்” அல்லது “நேசர்கள்” என்று சிலர் புரிந்து கொண்டு, முஸ்லிம்கள் மாற்று மதத்தவர்களோடு நட்பு கொள்வதை குர்ஆன் தடுப்பதாக எண்ணிக் கொள்கின்றனர். இந்த புரிதல் தவறாகும். ஏன் தவறு என்பதை சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்.
“அவ்லியா” என்ற வார்த்தையின் அர்த்தம்
“அவ்லியா” என்ற வார்த்தை, “வலீ” என்ற அரபு வார்த்தையின் பன்மைச் சொல்லாகும். “வலீ” என்ற வார்த்தைக்கு நண்பன், பாதுகாவலர், கூட்டாளி, உதவியாளர் போன்ற பல அர்த்தங்கள் உள்ளன. அவ்லியா என்ற வார்த்தைக்கு “நண்பர்கள், பாதுகாவலர்கள், கூட்டாளிகள், உதவியாளர்கள்” என்று பொருள் கொள்ளலாம்.
தமிழில் பல அர்த்தங்கள் உள்ள ஒரு வார்த்தையை எடுத்துக் கொள்வோம். உதாரணமாக: மணி. “மணி” என்ற சொல்லிற்கு டைம் (time), பெல் (bell), பீட் (bead) [முத்து மணி], இப்படி பல அர்த்தங்கள் உள்ளன.
“மணி என்ன?” என்று ஒருவர் கேட்டால், நேரத்தை கேட்கிறார் என்று புரிந்து கொள்வோம். அதே போல், “மணி அடிச்சாச்சா?” என்று ஒருவர் கேட்டால், “பெல்” அடிக்கப்பட்டு விட்டதா என்று கேட்கிறார் என்பதை புரிந்து கொள்வோம். “மணி” என்ற அதே வார்த்தை தான் இந்த இரண்டு வாக்கியத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த வாக்கியங்களுக்கு பொருத்தமான அர்த்தத்தையே நாம் எடுத்துக் கொண்டோம். இந்த விதி எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்.
இதை மனதில் வைத்துக் கொண்டு, “அவ்லியா” என்ற அரபு வார்த்தையின் அர்த்தத்தை புரிந்து கொள்வோம். “அவ்லியா” என்ற சொல்லிற்கு “பாதுகாவலர்” என்பதே சரியான பொருள். இந்த வசனங்கள் எல்லாம், முஸ்லிம்களோடு போரிட்டு, முஸ்லிம்களை கொல்ல வேண்டும் என்று துடிக்கின்ற மாற்றுமதத்தவர்களை பற்றி தான் பேசுகின்றன. எனவே, உங்களோடு சண்டையிடுபவர்களை பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று முஸ்லிம்களை பார்த்து இந்த வசனங்கள் கூறுகின்றன. இவ்வாறு சொல்வதில் என்ன தவறு? யாராவது சண்டையிட வருபவர்களை பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார்களா?
முஹம்மது நபி அவர்கள் கூட, “பாதுகாவலர்” என்ற அர்த்தத்தில் “வலீ” என்ற அரபு வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்கள்.
முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்:
இங்கு “வலீ” என்ற வார்த்தையை “பாதுகாவலர்” என்று சரியாக புரிந்து கொள்கிறோம். யாரும் “நண்பன் இல்லாமல் திருமணம் இல்லை” என்று புரிந்து கொள்வதில்லை.
3:118 வசனத்தின் விளக்கம்
இந்த வசனத்தின் மொழியாக்கத்தை படித்தாலே முஸ்லிம்களுக்கு தீங்கிழைக்கும் மாற்றுமதத்தவர்களை பற்றித் தான் இந்த வசனம் பேசுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
58:22 வசனத்தின் விளக்கம்
இந்த வசனம் “பத்ரு” என்ற போர் நடந்த சமயத்தில் அருளப்பட்டது. முஸ்லிம்களின் எதிரிகள் முஸ்லிம்களை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தனர். முஸ்லிம்களை ஒட்டுமொத்தாக அழிக்க வேண்டும் என்று முழு மூச்சோடு எதிரிகள் போரிட்ட போது, முஸ்லிம்கள், எதிரிகள் தங்கள் உற்றார் உறவினர்களாக இருந்த போதும், சத்தியத்தின் பக்கம் துணை நின்ற காரணத்தால், இறைவன் முஸ்லிம்களை பாராட்டி பேசுகிறான்.
குர்ஆனின் செய்தி என்ன?
எந்த புத்தகமாக இருந்தாலும் சரி, ஒரு சில வசனங்களை மட்டும் வைத்துக் கொண்டு, நாம் ஒரு முடிவுக்கு வர கூடாது. புத்தகம் முழுவதும் எந்த கருத்தை தருகிறது என்று நாம் பார்க்க வேண்டும். அந்த வகையில், முஸ்லிம்கள், மாற்று மதத்தினரோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து குர்ஆன் என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.
முஸ்லிம் அல்லாதவர்களோடு உறவு பற்றி குர்ஆன்
ஒரு சமூகத்தையோ அல்லது மக்களையோ வெறுத்த போதிலும் அந்த மக்களுக்கு எதிராக அநீதமாக நடப்பதற்கு அனுமதி இல்லை என்பதை மேலே உள்ள வசனங்கள் தெளிவாக நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
இந்த வசனத்தில் “நன்மை” என்பதற்கு “தபர்ரு” என்ற அரபு வார்த்தை பயன்படுத்தப்படுள்ளது. மிக உயர்ந்த தரத்தில் காட்டப்படும் அன்பிற்கு தான் “தபர்ரு” என்ற சொல்லை அரபு மொழியில் பயன்படுத்துவார்கள்.
உதாரணமாக: “பிர்ருல் வாலிதைன்” என்று சொற்றோடர் அரபு மொழியில் பிரபலம். இந்த சொற்றோடர் பெற்றோர்களுக்கு காட்டும் அன்பை குறிக்கிறது.
பெற்றோர்களுக்கு எந்த அளவுக்கு உயர்ந்த தரத்தில் அன்பு செலுத்துவோமோ, அதே போல் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் உயர்ந்த தரத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்று இந்த வசனம் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்துகிறது.
அண்டை வீட்டார்களுடன் நடந்து கொள்ளும் முறை
முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் அண்டை வீட்டாரோடு எப்படி நடந்து கொள்கிறார் என்பதை இறை நம்பிக்கைக்கு அளவுகோலாக முஹம்மது நபி அவர்கள் ஆக்கியுள்ளார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
முஹம்மது நபி அவர்கள் பொதுவாக அண்டை வீட்டார்களுடன் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று கூறினார்களே தவிர, முஸ்லிம் அண்டை வீட்டார்களுடன் மட்டும் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என்று கூறவில்லை.
மேலே நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனங்களும், முஹம்மது நபி அவர்களின் பொன் மொழிகளும், முஸ்லிம்கள் மாற்று மதத்தினருடன் சிறந்த முறையில் நடந்து கொள்வதை வலியுறுத்துகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
கூடுதல் தகவலுக்கு
குர்ஆன் இந்துக்களை காஃபிர் என்று கூறி இழிவுபடுத்துகிறதா?